search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ஸ்வால்"

    • முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது.
    • ஜெய்ஸ்வால் 98 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் அய்யர் 57 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 14வது ஓவரிலேயே இலக்கை எட்டியது.

    துவக்க வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டினார். 13 பந்துகளில் அரை சதம் கடந்த ஜெய்ஸ்வால், தொடர்ந்து பந்துகளை பவுண்டரி சிக்சர்களாக பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    13 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜெய்ஸ்வால் 97 ரன் எடுத்திருந்தார். 14வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து சதத்தை நிறைவு செய்து, வெற்றியை எட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பந்தில் அவர் பவுண்டரி அடித்தார்.

    எனவே 41 பந்துகள் மீதமிருந்த நிலையில், ராஜஸ்தான் அணி  9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 98 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    • கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் 6-வது வெற்றி பெற்றது.
    • கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற கற்றுக் கொண்டுள்ளேன்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் 13.1 ஓவரில் ஒரு விக்கெட் டுக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

    ராஜஸ்தான் அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்கள் குவித்தார். அவர் 13 பந்தில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

    மைதானத்துக்குள் சென்று நன்றாக விளையாட வேண்டும் என்று என் மனதில் எப்போதும் இருக்கும். நாங்கள் வெற்றி பெற்றது நல்ல உணர்வை அளிக்கிறது. எல்லாம் சரியாக நடந்தது போல் இல்லை. ஆனால் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

    செயல்முறை மிகவும் முக்கியம். கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற கற்றுக் கொண்டுள்ளேன். ரன் ரேட்டை உயர்த்த விரும்பினேன். சதத்தை பற்றி நான் யோசிக்கவில்லை.

    இதுபோன்று நடப்பது இயல்பு. சஞ்சு சாம்சன் என்னிடம் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். சிறந்த வீரர்களுடனும் விளையாடுவது பாக்கியம். இளம் வீரர்களுக்கு ஐ.பி.எல். ஒரு சிறந்த தளமாக இருக்கிறது என்றார்.

    • கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • கடைசி பந்தை ஒய்ட் போல வீசிய சூயஸ் சர்மாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று 56-வது லீக் போட்டியில் கொல்கத்தா -ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 149 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ராஜஸ்தான் அணி 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது.

    முன்னதாக இந்த போட்டியில் சரவெடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அதிவேக அரை சதமடித்தது போலவே சதத்தையும் நெருங்கினார். அந்த நிலைமையில் சூயஸ் சர்மா வீசிய 12.3 -வது பந்தில் பவுண்டரி அடித்த அவர் 4-வது பந்தில் ரன்கள் எடுக்காத நிலையில் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 94* ரன்களை எட்டினார். அந்த நிலைமையில் கடைசி பந்தை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் தாம் 48* ரன்களில் இருந்த போது அரை சதமடிக்கலாம் என்ற சுயநலமின்றி அப்படியே தடுத்து நிறுத்தி அடுத்த பந்தில் சிக்சர் அடித்து சதமடிக்குமாறு ஜெயிஸ்வாலுக்கு கையை உயர்த்தி மகிழ்ச்சியுடன் சிக்னல் கொடுத்தார்.

    குறிப்பாக 2014 டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றியை உறுதி செய்த விராட் கோலிக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது புதிதாக களமிறங்கிய கேப்டன் டோனி ஒரு ஓவரின் கடைசி பந்தில் அடிப்பதற்கேற்றார் போல் பந்து நன்றாக வந்தும் அப்படியே தடுத்து நிறுத்தி விராட் கோலிக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. அதே போல இந்த போட்டியில் பெருந்தன்மையுடன் சுயநலமின்றி கேப்டனுக்கு அடையாளமாக சஞ்சு சாம்சன் செயல்பட்டது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்து பாராட்ட வைத்தது.

    ஆனால் ஜெய்ஸ்வால் சதமடிக்க கூடாது என்பதற்காக அதே கடைசி பந்தை வேண்டுமென்றே சூயஸ் சர்மா ஒய்ட் போல லெக் சைட் வீச முயற்சித்தார். இருப்பினும் அந்த சமயத்தில் சுதாரித்த சஞ்சு சாம்சன் இடது புறமாக நகர்ந்து சென்று அடிக்காமல் ஒய்ட் பந்தாக மாறாமல் தடுத்து நிறுத்தினார். அதற்கடுத்த ஓவரில் ஜெய்ஸ்வால் பவுண்டரி மட்டுமே அடித்து 98* ரன்கள் எடுத்து சதத்தை நழுவ விட்டது வேறு கதை. ஆனால் ஒய்ட் போட்டு அதில் 1 ரன் எக்ஸ்ட்ரா வழங்கி மீண்டும் பந்து வீசினால் சஞ்சு சாம்சன் வெற்றி பெறும் ரன்களை எடுப்பார். அதனால் ஜெய்ஸ்வால் சதமடிக்க முடியாது என்ற எண்ணத்துடன் வேண்டுமென்றே கடைசி பந்தை ஒய்ட் போல வீசிய சூயஸ் சர்மாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அத்துடன் ஏற்கனவே ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக இதே போல் கடைசி பந்தில் சதமடிக்கும் வாய்ப்பை பெற்ற சேவாக் சிக்சர் அடித்து 100 ரன்களை தொட்ட போதிலும் சுராஜ் ரண்டிவ் வேண்டுமென்றே நோபால் வீசி அதை தடுத்த கேவலமான திட்டத்தை யாராலும் மறக்க முடியாது.

    கிட்டத்தட்ட இந்த போட்டியில் தங்களது பிளே ஆப் சுற்று வாய்ப்பைப் பறித்த ஜெய்ஸ்வாலை சதமடிக்க விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கொல்கத்தா மற்றும் சூயஸ் சர்மா அவ்வாறு செயல்பட்டதால் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    • ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
    • எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்த போட்டியில் 2-வது ராஜஸ்தான் அணி விளையாடியது. இதன் முதல் ஓவரை கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா வீசினார். அதில் 26 ஓட்டங்களை ராணா வழங்கியிருந்தார்.

    ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும் என கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியுள்ளார்.

    இது குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியிருப்பதாவது:-

    ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆட்டத்தில் அவர் என்ன நினைத்தாலும் அது நடந்தது. இந்த மைதானத்தில் 180 ரன்கள் அடித்தால் சரியாக இருக்கும் என்று ராசின் போது கூறினேன். ஆனால் எங்களது பேட்டிங் இன்று சிறப்பாக அமையவில்லை. இறுதியில் இரண்டு புள்ளிகளை நாங்கள் இழந்து விட்டோம்.

    ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.

    மேலும் பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் சுதாரித்து ஆடுவார்கள் என்று திட்டமிட்டேன். ஆனால் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே இப்படி ஆடுவார் என்று எனக்கு தெரியாது.

    இவ்வாறு நிதிஷ் ராணா கூறினார்.

    • ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தவீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
    • கடைசிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச்செய்தார்.

    பெங்களூரு:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.

    அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தவீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச்செய்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவரது பேட்டிங் திறமையை பலரும் பாராடி வருகின்றனர்.

    இந்த நிலையில், ஜெய்ஸ்வாலை, பெங்களூரு வீரர் விராட் கோலி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள கோலி, சமீபத்தில் தான் பார்த்த மிகச்சிறப்பான பேட்டிங் என்றும், ஜெய்ஸ்வாலின் திறமை அற்புதமானது என்றும் கோலி குறிப்பிட்டு உள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கூறுகையில்:- நான் மட்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இருந்தால் நிச்சியமாக ஜெய்ஸ்வால்-ஐ இன்றே தேர்வு செய்து உலகக்கோப்பை போட்டிக்கு விளையாட வைத்திருப்பேன். ஏனென்றால் இளம் வீரரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    அதேபோல ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ப்ரெட் லீ அவரது ட்விட்டர் பக்கத்தில் சூப்பராக விளையாடுகிறார் ஜெய்ஸ்வால். இப்பொழுதே அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

    இதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்த அதிரடி தொடருங்கள் என கூறியிருந்தார்.

    • பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார்.
    • இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்ததன் மூலமாக 15 ஆண்டுகால சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

    உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்து வளர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 18-வது வயதில் முதல் முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடினார். இதில், அவர் 3 போட்டிகளில் 40 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தனது 19-வது வயதில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் 249 ரன்கள் குவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி 258 ரன்கள் குவித்தார்.

    இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 124 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் மட்டும் அவர் 87 பவுண்டரி மற்றும் 26 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் 15 ஆண்டுகாலம் நீடித்த ஒரு சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

    இதன் மூலம் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்து, சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு ஷான் மார்ஷ் இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை 21 வயதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

    • இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்தார்.
    • ஜெய்ஸ்வாலுக்கு பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வினும் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை லண்டனில் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்திய போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டியில் மாற்று வீரராக பங்கேற்க இயலாது. இதனால் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக ஜெய்ஷ்வால் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் முடிந்ததும் சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்காக லண்டன் சென்றனர்.

    இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்தார். ஜெய்ஸ்வாலுக்கு பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வினும் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலா இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் நாள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.

    இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் 11 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

    • இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்டில் சதமடித்தார்.
    • அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார்.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.

    இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் 11 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

    அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார். ஆனால் 103 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா சதமடித்து அசத்தினர்.
    • முதல் விக்கெட்டுக்கு இந்திய ஜோடி 229 ரன்கள் சேர்த்தது.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.

    இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் சதமடித்தார். அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார். ஆனால் 103 ரன்னில் அவுட்டானார்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து இறங்கிய சுப்மான் கில் 5 ரன்னில் அவுட்டானார்.

    தொடர்ந்து இறங்கிய விராட் கோலி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்னும், விராட் கோலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது வரை இந்தியா 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • வெளிநாட்டு மண்ணில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர்.
    • பந்துக்கு பந்து விளையாடி எனது கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன்,

    வெஸ்ட் இன்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறங்கிய புதுமுக வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். அவர் 143 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார்.

    அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 17-வது இந்திய வீரர் ஆவார். மேலும் அறிமுக டெஸ்டில் தொடக்க வீரராக அடித்த 3-வது இந்திய வீரர், ஜெய்ஸ்வால் ஆவார். வெளிநாட்டு மண்ணில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர்.

    அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் உள்பட ஏராளமான வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேற்றைய ஆட்டத்துக்கு பிறகு ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

    சதம் அடித்த தருணம் எனக்கு உணர்ச்சிகரமாக இருந்தது. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உணர்ச்சிகரமானது. என்னை பற்றி நான் பெருமைப்படுகிறேன். இந்திய அணியில் வாய்ப்புகளை பெறுவது கடினம். எந்த வகையிலும் என்னை ஆதரித்த, உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இதை என் தாய்-தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்.

    அவர்கள் நிறைய பங்களித்திருக்கிறார்கள். கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் இப்போது அதிகம் சொல்லமாட்டேன். இது ஒரு தொடக்கம். நான் நிறைய செய்ய வேண்டும்.

    ஆடுகளம் மெதுவாக உள்ளது. அவுட் பீல்டும் மிகவும் மெதுவாக உள்ளது. அது கடினமாகவும் சவாலாகவும் இருந்தது. அதை எதிர்கொண்டு ரன்களை எனது நாட்டுக்காக குவிக்க விரும்பினேன். பந்துக்கு பந்து விளையாடி எனது கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன். இந்த சவாலை எதிர்கொள்ள விரும்புகிறேன். எல்லாவற்றிலும் நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 5 விக்கெட்டுக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து இறங்கிய சுப்மான் கில் 5 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்னும், விராட் கோலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 171 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், விராட் கோலி ஜோடி 110 ரன்கள் எடுத்தது. அடுத்து இறங்கிய ரகானே 3 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்து 76 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ×